Monday, 25 February 2013

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்


சொல்லி அழ யாருமில்லை... அவர்

சோகம் சொல்ல வார்த்தையில்லை

கொத்துக் குண்டில் தப்பவில்லை

கொள்ளி வைக்க யாருமில்லை

முள்ளி வாய்க்கால் முழுதும் ரத்தம்...  

சொல்லும்

மெல்லஉயிர் பிரிந்த சத்தம்.......  

 

நல்லக் கஞ்சி குடித்தாரில்லை - அவர்

நாவின் சுவைக்கடிமை யில்லை - பஞ்சு

மெத்தையிலே படுத்தா ரில்லை  

ஒத்தையிலே வாழ்ந்த உடல்கள்

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்.....

No comments:

Post a Comment