சொல்லி அழ யாருமில்லை... அவர்
சோகம் சொல்ல வார்த்தையில்லை
கொத்துக் குண்டில் தப்பவில்லை
கொள்ளி வைக்க யாருமில்லை
முள்ளி வாய்க்கால் முழுதும் ரத்தம்...
சொல்லும்
மெல்லஉயிர் பிரிந்த சத்தம்.......
நல்லக் கஞ்சி குடித்தாரில்லை - அவர்
நாவின் சுவைக்கடிமை யில்லை - பஞ்சு
மெத்தையிலே படுத்தா ரில்லை
ஒத்தையிலே வாழ்ந்த உடல்கள்
உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்.....
No comments:
Post a Comment