Monday, 4 February 2013

மாறாத காடையர்..


சாட்சிய மற்ற

சமநிலை யற்ற

சமரில் மடிந்த

சிங்கங்களை ...

அவிழ்த்துப் பார்த்த

சிங்கள அசிங்கங்களே....

நுமக்கு சீருடை எதற்கு?

நும்சிறு கோழைச்செயல் நாணி

சீருடையும் சினம்கொள்ளும்

சிந்தனையும் நாறும்...

அந்த

வீரச்செயலை விசாரிக்கும்

பன்னாட்டு விசாரணைக்கு

பயம் எதற்கு?

உத்திரத்தில் இருக்கு

ஒருநாள்

உமக்கும் ஒரு சுருக்கு!!!

No comments:

Post a Comment