Tuesday, 22 January 2013

களத்தில் மடியாக் கனவுகள் ...

சிங்கள நாய்களால்
சிதைக் கப்பட்டாலும்
சிதைக் காணாமலே
சிதைந்த உடல்களின்
சிந்தியக் கனவுகள் - நாளை
செவ்வனே ஈழத்தில்
சிதையாமல்முளைக்கும் 
சிந்தையில் வையுங்கள்..
 

Tuesday, 15 January 2013

மனச்சிதையில் உயிர்ப்பவர்கள்

விடியலுக்காக வெந்து மடிந்த
முள்ளி வாய்க்காலின்
ஈக்கள் மொய்க்கும்
ரணங்களோடு பிணங்கள்,
இதயத்தைத்  தாக்கும்
இறந்தாலும் கேட்கும்
விடுதலை!!!...
 

Tuesday, 1 January 2013

பாவம் அவள் தமிழச்சி

 
டெல்லியில்
ஒருத்தியின்
துயரத்தில்
உலகமே
அழுதது
ஈழ உலகமே
துயரத்தில் - ஏன்
உலகமோ
மௌனத்தில்?
பாவம்
அங்கே
தாராளமாய்
சிதைத்தவன்
சிங்களன்தானே
சீரழிந்ததோ
ஏராளம்
தமிழச்சிகள்தானே.