Monday, 10 December 2012

ஈழத்தின் அழு குரல்

ஓ... பான் கீ மூன்..?

ஈழத்தார் அழுதகுரல் கேட்கிலயோ ? உமக்கு
எதுவும் செய்யவழி தெரியலையோ? நீங்கள்
உலகத்தலைமகனோ ? உதவாக்கரை விலைமகனோ ?

சரித்திரத்தில் ஆகிவிட்டீர் உண்மையின் கொலைமகனாய் !!!.

மானிடம் பேணும் மாண்பு மறைந்தவரா ? - மனசாட்சி
இறந்தவரா? மதிநலன் சிதைந்தவரா? இனவெறியின்
வலிதெரியா இதயத்தாரோ? நீவீர் யாரோ? வெறும்
நீலிவேசம் போடும் டிராகுலாவோ ? ஈழத்தார்

காணிடம் அனைத்தும் உடல்கள் சிதைந்ததை
கண்டபின்னும் அமைதி காத்த - உம்மை
மனிதனாக வேனினைக்க மறுக்கின்றதே!!! மனம்
சூனியனாக வேனினைத்து ஒதுக்கின்றதே!!!





No comments:

Post a Comment